search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் வழக்கு"

    • 27-ந் தேதி வீட்டிலிருந்த அனிதா உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி–விட்டுச் சென்றவர்.
    • அனிதாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க–ளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் அருகே புதுப்பா–ளையம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலாட்சி இவரது அக்கா குப்பம்மாள். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குப்ப–ம்மாளின் மகளான அனிதா (வயது 29) என்பவர் தனது சித்தி அஞ்சலாச்சியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி வீட்டிலிருந்த அனிதா உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி–விட்டுச் சென்றவர். இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சடைந்த அஞ்சலாட்சி அனிதாவை உறவினர் வீடு மற்றும் பல்வேறு இடங்க–ளில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    இது குறித்து அஞ்சலாட்சி கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடு–த்தார். புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அனிதா என்ன ஆனார்? எங்கு சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்ற–னர்.

    ×